குறுந்தொகை #18 எளிய வடிவில்
.
.
குன்றின் மீது கூவும் குயில்கள்
எட்டி பார்க்கும் குட்டி நிலவு
வெட்கி நிற்கும் வெள்ளி முகம்
திரண்ட காடாய் இருண்ட கூந்தல்
மஞ்சள் கொத்தாய் பிஞ்சு விரல்கள்
நெஞ்சம் தொட்டு கொஞ்சும் சுகம்
தாளம் போடும் தங்க கொலுசு
மேளம் தேடும் எந்தன் மனசு
தண்டு வாழை கெண்டை கால்கள்
கண்டு வீணை மீட்டும் கைகள்
வளைவு நெளிவாய் இஞ்சி இடை
வாரி அணைத்து கொஞ்சத் தடை
கவிழ்த்து வைத்த தென்னங்குலை
குத்தி கிழிக்குதென்னைக் கொலை
மூச்சுக்குழியின் ஏக்கச் சத்தம்
அசைந்து ஆடும் அலையின் சந்தம்
இனிதே முடிந்த இரவை எண்ணி
பிரிந்தே செல்லும் குறிஞ்சி நாடன்
மறித்தே பேசும் மங்கைதம் தோழி
விரித்தே விளம்பும் தலைவியின் துயரை
.
மூங்கில் வேலி மூடி மறைக்கும்
நடுவே நிமிர்ந்த *நடுக்கனி மரமும்
வேரில் முதிர்ந்த வேர்ப்பலா கொண்ட
வேங்கை நாட்டு வேடுவனே
சிறப்பாய் ஆளும் குடியின்கீழ்
பொறுப்பாய் வாழும் பொதுமக்கள்
வெறுப்பாய் ஏதும் செய்தாலும்
பொறுத்தே உம்மை காத்திடுவர்
.
கொங்கு மலை உச்சியில்
சங்கு முழங்கும் சாரலில்
ஓங்கி வளர்ந்த மரநுனியில்
தாங்கி பிடித்த ஒற்றை காம்பில்
வீங்கி பழுத்த பலா ஒன்று
விழுந்தே உடையும் நிலை கண்டு
சாய்ந்து ஆடும் சாயலில்
தோய்ந்து நிற்கும் மலைக்கன்னி
.
ஊசலாடும் உயிரோடு
ஊஞ்சலாடும் உணர்வோடு
உறவுக்கு காத்திருக்க
உன் வரவை பார்த்திருக்க
உன்காம வித்தையில் சிக்குண்டு
உண்காம உழலுகிறாள் ரணங்கொண்டு
நீயில்லை இச்சென்மமென தெரிந்தால்
உயிரில்லா பிணமாக நிஜமாவாள்
உயிர் ஆங்கே உடல்விடுத்து போகுமுன்
சேர்ந்திடுவாய் துயர் துடைக்க மருந்தோடு
விரைந்தங்கே சென்றிடுவாய்
வான்மகளை கொண்டிடுவாய்
.
#வாஞ்சிவரிகள்#
.
*முக்கனியில் நடுவில் உள்ள கனி பலா
.
குறுந்தொகை #18
.
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.
.
பாடியவர்: கபிலர்
No comments:
Post a Comment