குறுந்தொகை #20 எளிய வடிவில்
.
.
அக்கரையின் பச்சை
ஆசையின் இச்சை
இக்கரையில் செல்வம்
ஈட்டுதல் இன்பம்
உனைபோன்ற சான்றோர்
ஊரில் எவருமில்லை
என்று காண்போமென
ஏக்கம் வாட்டுதே
ஐயமின்றி வருவாய்
ஒன்றாய் உழைப்போம்
ஓங்கி வாழ்வோம்
.
கண் இமைத்தாலும்
உன் பிம்பம் மேல் -மறு
பிம்பம் சேர மறுக்கிறது
நா பேசினாலும்
உன் பேச்சு இல்லா
பேச்சு வர மறுக்கிறது
செவி மடுத்தாலும்
உன் குரல் விடுத்து-வேறு
குரல் கேட்டிட மறுக்கிறது
நாசி நுகர்ந்தாலும்
உன் வாசம் இல்லா
வாசம் நுகர்ந்திட மறுக்கிறது
உனையன்றி உயிரில்
ஓரணுவும் அசைந்திட மறுக்கிறது
.
அருளும் அன்பும் துறந்து
ஆசை மனையாள் விடுத்து
பொன்னும் பொருளும் சேர்க்க
சென்றாய் தூர தேசம்
தோற்றால் தூற்றும் என்றோ
ஆற்றல் பெற்ற நீயும்
நாடு விட்டு போனாய்
கற்ற சான்றோர்க்கு
செல்லுமிடம் சிறப்பெனினும்
உந்தன் திறமைக்கு
உள்ளூரில் கடைவிரித்தால்
ஊரே போற்றுமன்றோ !!!
.
.
#வாஞ்சிவரிகள்#
.
குறுந்தொகை #20
.
அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
.
பாடியவர்: கோப்பெருஞ்சோழன்
No comments:
Post a Comment