குறுந்தொகை #22 எளிய வடிவில்
.
.
அத்தான் அன்பாய் அணைத்தான்
பொத்தான் தாலியில் சிக்கி அத்தான்
தைத்தேன் அழகாய் அதைத்தான்
ரசித்தேன் எண்ணி இதைத்தான்
வதைத்தான் கனவில் எனைத்தான்
பதைத்தேன் பார்த்து உனைத்தான்
.
கடவுச்சீட்டின் மடல் பிரிக்க
களவுதட்டால் உன்நிழல் நனைக்க
தனித்திருக்கும் முகம் பார்த்து
பனித்திருக்கு இமை வியர்த்து
.
பிதுங்கிய பெட்டகத்துள்
பதுங்கியே வர முயன்று
மடித்தெனை உள்ளடக்க
துடித்தது என்னெஞ்சம்
.
கலக்கம் ஏனடி குணவதியே
விளக்கம் கூறடி வனமதியே
உந்தன் கண்ணில் நீர்வழிந்தால்
வேந்தன் நெஞ்சில் உதிரம் கொட்டுமடி
நிழலுன்னை பிரிந்தே போனாலும்
நிஜமுன்னை நினைத்தே வாடுமடி
நிதமுன்னை நெகிழ்த்திடுவான் பாடி-கண்
நீர்தன்னை துடைத்திட்டாள் சேடி
.
சாரலில் சரிந்து நிற்கும்
வலஞ்சுரி கடம்பு
வேனிலில் விளைந்து இங்கே
விருட்சமாய் விளங்குமன்றோ
வடம்பிடித்து வளர்ந்த வாகில்
கடம்பமாய் மலர்ந்த பூக்கள்
கதம்பமாய் கமழும் மணமே
வசந்தமாய் வீசும் தினமே
கலைந்தவுன் கேசத்தை
கைகளால் விலக்கியே
ஜொலித்திடும் முழுநிலவில்
பளிச்சிடும் பிறைநுதலில்
நறுமணம் கமழ்ந்திடுமே
பார்மனம் புகழ்ந்திடுமே
.
நாறும் மணமுமாய்
நகமும் சதையுமாய் வாழ
நலிந்தே போனவுன்னை
பிரித்திடல் பாவமென்றே
அகத்துனை அறிந்திடுவான்
அழைத்துனை சென்றிடுவான்
.
#வாஞ்சிவரிகள்#
.
குறுந்தொகை #22
.
நீர்வார் கண்ணை நீயிவண் ஒழிய
யாரோ பிரிகிற் பவரே சாரற்
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
வேனில் அஞ்சினை கமழும்
தேமூர் ஒண்ணுதல் நின்னொடுஞ் செலவே.
.
பாடியவர்: சேரமானெந்தை
No comments:
Post a Comment