Wednesday, May 31, 2017

குறுந்தொகை #23

குறுந்தொகை #23 எளிய வடிவில்
.
காடுமலை கடந்து வந்த காகமே
காதலனை கண்டாயா காணோமே
தேடிநித்தம் துடிக்குதிந்த தேகமே
வாடிநித்தம் வதங்குதிந்த வதனமே
மலையரசி போர்த்தியுள்ள மேகமே
இளவரசு இடம் அறிந்தே பேசுமே
.
மழை பார்த்து மகிழ்ந்தாடும் மயிலினை
குளிர் காக்க சால்வையிட்ட பேகனே
துயிலின்றி துயருரும் குறிஞ்சி நிலவஞ்சியை
துயரின்றி காத்திடுவாய் கொஞ்சியே
.
துள்ளி விளையாடி வந்த வண்ணமயில்
துன்பத்தில் துவழ்வதேனோ தெரியலியே
செங்காந்தள் சேர்த்தணைத்த செவிலியே
உண்ணாமல் உழல்வதேனோ என் செல்வியே
நல்லொழுக்கம் நன்கறிந்த கண்மணியே
களவொழுக்கம் கடைபிடித்தால் இப்பிணியே
.
சங்குமணி ஆரமிட்ட குறிகாரி கட்டுவிச்சி
வெள்ளிமணி தீட்டிவிட்ட சிகையதிலே நட்டுவச்சி
குன்றத்தில் குமரன் கதை பாடக் கேட்டு
மன்றத்தில் வீற்றிருந்த மகளிர் எல்லாம்
மதிமயங்கி குறிஞ்சி புகழ் போற்றலானர்
மருமகனின் வரவை எண்ணி தேற்றலானர்
.
#வாஞ்சிவரிகள்#
.
குறுந்தொகை #23
.
அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டேஅவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.
.

பாடியவர்: ஔவையார்

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...