Wednesday, May 31, 2017

குறுந்தொகை #8

குறுந்தொகை #8 எளிய வடிவில்
.
.
வளமாய் விளையும் வயலும்
குளமாய் நிறைந்த குடியும்
செழித்து குலுங்கும் மாமரத்தில்
பழுத்து விழுந்த கனியை   
நோகாமல் கவ்வும் வாளைமீன் கூட்டம்   
போகாமல் பொய்யாய் சேர்ந்திடும் கூட்டம்  
மா தென்னை கொஞ்சிடும் ஊரான்
மாதென்னை வஞ்சித்து  வாரான்
.
என்னவெலாம் செய்தனை  என்னில்
சொன்னதெலாம் புரிந்தாய் முன்னில்
ஆசையில்  அணைத்தனை கட்டிலில்  
நிராசையில்  பிரிந்தனை இக்கட்டில்
பகலில் செய்வாய் சொல்வதை  
இரவிலே செய்வாய் சொல்லாததை
.
புதல்வனின் தாயிடத்து இங்கே
முதல்வனின் வீரம் போனது எங்கே
ஆடி முன் ஆடிடும் பொம்மையோ
நாடி பின் போனது உண்மையோ
மைதீட்டிய  மையலில் மயங்கியே   
கைகட்டி நின்றனன் தயங்கியே.
.
.
#வாஞ்சிவரிகள்#
.
.
குறுந்தொகை #8
.
கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல

மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.   

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...