குறுந்தொகை #21 எளிய வடிவில்
.
.
திரண்ட வானம்
இருண்ட கானம்
குயிலின் கானம்
அவளின் நாணம்
கொன்றை மரமாய்
நங்கை கண்டு
பசுமைத் தழையாய்
பதுமை கூந்தல்
மின்னும் சரமாய்
பொன்னுன் சிரமாய்
கண்ட கோலம்
காட்டும் காலம்
காதல் உள்ளம்
கண்டு துள்ளும்
கனமழைக்காலம்
காணுமே நாளும்
.
கோதையின் வீட்டில்
கீதையின் பாட்டில்
போதையில் வண்டாட
கொன்றையும் திண்டாட
அரும்புகள் உண்டாக
மலர்ந்தது செண்டாக
.
என்னுயிர் தோழி
கேளடி ஓர் நாழி
சன்னல் ஒட்டி
பின்னல் பின்ன
மின்னல் வெட்டி
விண்ணில் மின்ன
முன்னால் முதல்வன்
சொன்னானே
தன்னால் வருவேன்
என்றானே
மழைக் காற்றை
தாக்க வைத்து
கொன்றை மலரை
பூக்க வைத்து
தாவும் குயிலை
கூவ வைத்து
ஓடும் மயிலை
ஆட வைத்து
கொஞ்சும் கிளியை
பேச வைத்து
நெஞ்சில் கிலியை
மூடி வைத்து
கண்ணில் காணும்
கார்காலம்
காமதேவனின்
லீலையோ
காலதேவனின்
வேலையோ
.
.
#வாஞ்சிவரிகள்#
.
குறுந்தொகை #21
.
வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றை
கானங் காரெனக் கூறினும்
யானோ தேரேன் அவர் பொய்வழங் கலரே.
.
பாடியவர்: ஓதலாந்தையார்
No comments:
Post a Comment