குறுந்தொகை #4 எளிய வடிவில்
நெஞ்சே ! நெஞ்சே !
நித்தம் உன் விரல் கொண்டு
என் சித்தம் சிலிர்ப்பாயே
கலங்கும் என் விழியை
விழுங்கும் உன் விழியால் துடைப்பாயே
நோகும் என் இதயத்தை
உரசும் உன் தேகத்தால் காப்பாயே !!
எங்கே ! எங்கே !
என் பிணி தீர்க்கும் உன் விரல்கள் எங்கே !
நெஞ்சம் தவிக்குதே
தேகம் கொதிக்குதே
கண்கள் பனிக்குதே
எப்போ நீ வருவாயோ
என் உயிர் தன்னை காப்பாயோ !!
#வாஞ்சிவரிகள்#
#4 குறுந்தொகை
நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்தநங் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே.
No comments:
Post a Comment