குறுந்தொகை #19
.
.
விளக்கு வைக்கும் வேளையிலே
விளைந்து நிற்கும் குவளையே
விரைந்து வீசும் காற்றிலே
விலகி நிற்கும் தென்றலே
விடியலில் வந்த விடிவெள்ளி
விண்ணில் பறப்பேன் உனையள்ளி
விலங்கிடு கிடப்பேன் உன்னடியே
விளம்பிடு விரசம் என்னடியே
விழைந்தது விதியென சொல்லி
விலகாதே எனைவிட்டு தள்ளி
.
மையிருட்டு பூசிய கூந்தலில்
மையலிட்டு மயக்கும் தையலே
வீட்டருகே விரிந்த விருட்சத்தில்
பட்டுபோல் படர்ந்த மணிமுல்லை
தொடுத்து சூடிய மங்கையே
விடுத்து வாடும் பிணக்கம் ஏனோ
முல்லைக்கு தேர் தந்தான் பாரி-இம்
முல்லைக்கு மணம் தந்தாய் சூடி
எவ்வி அரசன் இழப்பில் இடிந்து
வாடும்பாணர் யாழை முறித்து
சிரசில் சூடும் பொன்மலர் விடுத்து
பொலிவிழந்து போயினர் அன்று
.
வஞ்சிக்கொடியே உனக்காக-என்
நெஞ்சு உன்னை கெஞ்சுதடி
பாலாய் பொங்கும் நம்காதல்
பாழாய் போகப் போகுதடி
செழித்து வளர்ந்த நம்முறவு
நலிந்து போக கூடுமடி
தெளிவாய் நீயும் யோசித்தால்
வாழ்வில் வசந்தம் வீசுமடி
.
.
#வாஞ்சிவரிகள்#
.
.
குறுந்தொகை #19
.
எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவல் நாறும்
பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே.
.
பாடியவர்: பரணர்
No comments:
Post a Comment