Thursday, November 2, 2017

#147 கம்பன் எளிய தமிழில்

#147 கம்பன் எளிய தமிழில்
.
கரிப்பிழம்பொளியாய் ஒளிரும் விழியுடை
அரியும் இரைதேடி இடைசிறுத்த சிம்மமும்  
வகையாய் பிண்ணிப் பிணைந்து களிப்புற  
குகையால் சூழ்ந்த மலைகள் உடைத்தது  
.
குன்றென வளர்ந்த கரிமலைக் களிறுகள்
கன்னம் கை கோசமாம் மும்மதத்து மதநீர்
மண்ணில் விழுந்து மழையாய் பொழிய
தண்ணீர் கரைத்து ஆழமும் சகதியுமாகி  
வடம் பிடித்து வழிசெல் வலிய ரதங்களும்
தடம் பதித்து மண்சேற்றில் புதையுண்ணும்
.
#வாஞ்சிவரிகள்#
.
தழல் விழி ஆளியும் துணையும் தாழ் வரை
முழை விழை கிரி நிகர் களிற்றின் மும் மத
மழை விழும்; விழும்தொறும். மண்ணும் கீழ் உறக்

குழை விழும்; அதில் விழும். கொடித் திண் தேர்களே.

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...