#181 கம்பன் எளிய தமிழில்
.
இராம ராஜ்யம் எப்படி இருந்தது என்று நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நம் ராஜ்யம் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதற்கு கம்பனின் இந்தப் பாடல் ஒரு சாட்சி. சூரியனையும் விட சிறப்பாக தம் மக்களைக் கண்ணுக்குள் வைத்துக் காத்த மாமன்னர்கள் ஆண்ட பூமி நம் பூமி. எளிய தமிழில் பாடல் உங்களுக்காக இதோ.....
.
திரு அவதாரப் படலம்
.
பகலவன் வந்து
பகல் அவன் தந்து
ஒளி வெள்ளம் பாய்ச்சி
புவி உள்ளம் மலர்ந்து
பயிரினம் விளைவித்து
உயிரினம் காப்பதினும்
எம்குலத் தலைவர்கள்
தம்குலம் சிறப்புற
அறநெறி தவறா
திறம்படத் திகழ்ந்து
கயவரைக் களைந்து
பகைவரை அழித்து
சான்றோரைப் போற்றி
ஈன்றோரை வாழ்த்தி
தருமம் காத்து தரணி தாங்கினர்
புகழ்ச்சிக்கு மயங்காமல்
இகழ்ச்சிக்கு அஞ்சாமல்
நிகழ்ச்சிகள் நடத்தி
மகிழ்ச்சியாய் மக்கள் வாழ
வசிட்டரின் அருளொடும்
வசிப்பவர் பொருளொடும்
சூர்யகுல வேந்தர்கள்
இவ்வயோத்தியில் இருந்தே
வரம்பிலா இவ்வையத்தை
வானவரும் போற்ற
வளமொடு இனிதே காத்தனர்
.
#வாஞ்சிவரிகள்#
.
‘எம் குலத் தலைவர்கள். இரவிதன்னினும்
தம் குலம் விளங்குறத் தரணி தாங்கினார்.
மங்குநர் இல் என. வரம்பு இல் வையகம்.
இங்கு. நின் அருளினால். இனிதின் ஓம்பினேன்.
No comments:
Post a Comment