#195 கம்பன் எளிய தமிழில்
.
ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று சக்திகளும் இணைந்தால் தான் அதர்மத்தை அழித்து
தர்மத்தை நிலைநிறுத்த முடியும் என்பதைச் சொல்லும் கம்பனின் பாடல் எளிய தமிழில் இதோ...
.
பிறைச் சந்திரன்
மறைந்து விளையாட
நிறை சடைமுடி தறித்து
தடதடத்த கங்கையை அடக்கி
அங்கத்தில் பாதியை
மங்கைக்கு அளித்து
நர்த்தகியர் நாணும்
நர்த்தணம் ஆடி
அழிக்கும் அறப்பணி
பழிக்கா வண்ணம்
மழுவாளி சிவபிரானும்
பரம்பொருளை தொழுது பணிந்து
வரம்தனை அளித்து
சரமென உயிர்களை படைத்து
உலகினை இயக்கும்
நான்மறை போற்றும்
நான்முகன் பிரம்மனும்
நாற்கரம் கொண்டு
பொற்கரம் பிடித்து
பேரண்டம் காக்கும்
பெருமான் திருமாலும்
களிப்புடன் கயிலையில்
மகிழ்வுடன் களிக்கும் வேளையில்
மாதவம் புரிந்து
மாதவனை துதிக்கும்
மாமுனிவரும்
விண்ணுலகில் வாழும்
தேவாதி தேவரும்
கொதிகொள் வேலொடு
கொடுங்கோன்மை இழைக்கும்
மதியற்ற அரக்கர்தம்
கொடுந்தொழிலை உரைத்தனர்
.
#வாஞ்சிவரிகள்#
.
விதியொடு முனிவரும். விண்ணுளோர்களும்-
மதி வளர் சடைமுடி முழுவலாளனும்
அதிசயமுடன் உவந்து. அயல் அருந்துழி-
கொதி கொள் வேல் அரக்கர்தம் கொடுமை கூறினார்.
No comments:
Post a Comment