#189 கம்பன் எளிய தமிழில்
.
சிரம் ஒரு பத்தும்
கரம் இரு பத்தும்
உரவலிமையும்
வரவலிமையும் உடைத்த
அருட் செல்வமற்ற மன
இருள் வடிவான இராவணன்
வல்லமையை எதிர்த்து
வெல்ல வழி தெரியாது
நிம்மதி தொலைத்து
நின்பாதம் தொழுது
நிற்கதியாய் நிற்கின்றோம்
கருமுகிலென வளரும்
கருணைக் கடலாம்
திருமறை போற்றும்
திருமால் அவதரித்து
அசுரருக்கும் அடங்கா
அவ்வரக்கனுடன் போரிட்டு
அதர்மம் அழித்து
தர்மம் காத்து
எம்துயர் தணித்தாலன்றி
எமக்கு உய்வில்லை
.
#வாஞ்சிவரிகள்#
.
இருபது கரம். தலை ஈர்-ஐந்து என்னும் அத்
திருஇலி வலிக்கு. ஒரு செயல் இன்று. எங்களால்.
கரு முகில் என வளர் கருணைஅம் கடல்
பொருது. இடர் தணிக்கின் உண்டு. எனும் புணர்ப்பினால்.
No comments:
Post a Comment