#209 கம்பன் எளிய தமிழில்
.
ஈரேழு உலகும் காக்கவல்ல
ஈடில்லாப் புதல்வரைத் தரவல்ல
வேள்வி நீ முயன்று செய்தால்
நீள்துயர் அகன்றிடும் என
திருமாலின் மூலோபாயம் உணர்ந்து
பெருமுனி வசிட்டரும் கூற
.
மன்னர் மன்னன் தயரதனும்
பேருவகை பொங்க எழுந்து
மணிமுடி மண்ணிலே சாய்த்து
மாமுனி திருப்பாதம் தொழுது
நின்னையே சரணென்று
நித்தமும் நிற்கும் எந்தனுக்கு
எத்துன்பமும் வந்து சேர்வதில்லை
அன்னதற்கு அடியேன் செய்யும் பணி
இன்னதென்று இனிதே அளித்திடும் என்றான்
.
#வாஞ்சிவரிகள்#
.
மூலோபாயம் - strategy
.
என்னமா முனிவன் கூற. எழுந்த பேர் உவகை பொங்க.
மன்னர் மன்னன். அந்த மா முனி சரணம் சூடி.
‘உன்னையே புகல் புக்கேனுக்கு உறுகண் வந்து அடைவது
உண்டோ?
அன்னதற்கு. அடியேன் செய்யும் பணி இனிது அளித்தி’
என்றான்.
No comments:
Post a Comment