#159 கம்பன் எளிய தமிழில்
.
பிளிறி முழங்கும் மதமிகு வலிவுடை
களிறின் பிடரியில் வலிமையால் ஏறி
நகரின் நான்மாட வீதியில் வலமாய்
நகர்ந்தங்கு உற்சாக உலா சென்றும்
.
புடைத்தெழும் புரவி பூட்டிய ரதம்தனில்
புடைசூழும் புரவலர் புகழுரை எழுப்ப
படைபயின்று தோளுடைத்த வீரரும்
நடைபயின்று ஊரினில் ஊர்ந்து சென்றும்
.
துன்பம் தோய்ந்து வறுமையில் வருவோரை
இன்முகம் கொண்டு இருகரம் இணைத்து
இன்னல் அகற்றி இனிதே வாழ்ந்திட
பொன்னும் பொருளும் வாரி வழங்கியும்
.
பொழுதுபோக்கும் இளைஞரும் இறைவனை
தொழுது போற்றும் இளவரசரும் நிறைந்த நகரம்
.
#வாஞ்சிவரிகள்#
.
முழங்கு திண் கட கரி மொய்ம்பின் ஊரவும்.
எழும் குரத்து இவளொடு இரதம் ஏறவும்.
பழங்கணோடு இரந்தவர் பரிவு தீர்தர
வழங்கவும். பொழுது போம் - சிலர்க்கு. அம்மாநகர்.
No comments:
Post a Comment