Thursday, November 2, 2017

#199 கம்பன் எளிய தமிழில்

#199 கம்பன் எளிய தமிழில்
.
பத்து தலை இராவணன்
நித்திய தவத்தினால்
எத்தகை முனிவரும் தேவரும் அசுரரும்
வித்தகன் தனை வென்று
மாய்த்தல் ஆகாதென
வாய்ப்பாய் வரமொன்றைப்
பெற்றவன் அகந்தையால்
விட்டனன் மாந்தர் மந்தி இரண்டினை..
.
இரக்கமற்று இம்சிக்கும்
அரக்கர்தனை அழிக்க
அளித்த வரத்தை ஆய்ந்து
சலித்து சாரம் அறிந்து
மூர்த்திகள் மூவரும் கூடி
மூழ்கினர் தீர்வினைத் தேடி
.
மானுடமும் வானரமும் கூடி
சேனையாக சென்றாலன்றி
வெல்வது அரிதென உணர்ந்து
வானவர் எல்லாம் வானரமாகி
கானகம் சென்று பிறப்பீர்
மலைகளிலும் அடிவாரத்திலும்
புரண்டு திரிந்து வளர்ந்து
திரண்ட குரங்கினமாய் இருப்பீரென
கருணைக் கடலான்
திருமகள் நாயகன்
திருவாய் மலர்ந்து அருளினன்
.
#வாஞ்சிவரிகள்#
.
வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய்.
கானினும். வரையினும். கடி தடத்தினும்.
சேனையோடு அவதரித்திடுமின் சென்று’ என.

ஆனனம் மலர்ந்தனன்- அருளின் ஆழியான்

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...