Thursday, November 2, 2017

280-282 கம்பன் எளிய தமிழில்

280-282 கம்பன் எளிய தமிழில்
.
மண்மகள் களிப்பில் திளைத்திட
விண்ணுளோர் உள்ளம் வியந்திட
விண்மகள் உடுத்தும் புனர்பூசமும்
நண்டுரு கற்கடகமும் பேற்றினை
எண்ணி மகிழ்ந்து துள்ளிட
பெண்மை போற்றும் பேறு காலம்
மண்ணைக் காக்க மலர்ந்தது
.
தத்துறல் ஒழிந்து தருமம் ஓங்க
சித்தரும் இயக்கரும்
தத்தம் தேவியரும்
வித்தகரும் வானவரும்
நித்தரும் முறையே குழுமி
சத்தமாய் ஆர்பரித்தனர்
.
பிரளயப் பேரழிவில்
உதரம் மறைத்து உலகு காத்து
ஆலிலையில் தவழ்ந்து
திருவுலா சென்ற திருமாலை
அருமறை உணர்ந்தும்
பொருள் தேட இயலா
பரம்பொருளாம் அப்பரமனை
கருவிழி தீட்டிய அஞ்சனமும்
கருமுகில் கொழுந்தாய் எழில் காட்டும்
கருநிற ஒளியாய் திகழ்பவனை
விண்ணில் மங்கலம் முழங்கிட
மண்ணில் ஈந்தனள் திறம்கொள் கோசலை
.
#வாஞ்சிவரிகள்#

#280 கம்பன் எளிய தமிழில்

ஆயிடை. பருவம் வந்து அடைந்த எல்லையின்.
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட.
வேய் புனர்பூசமும். விண்ணுளோர்களும்.
தூய கற்கடகமும். எழுந்து துள்ளவே.

மண்மகள் களிப்பில் திளைத்திட
விண்ணுளோர் உள்ளம் வியந்திட
விண்மகள் உடுத்தும் புனர்பூசமும்
நண்டுரு கற்கடகமும் பேற்றினை
எண்ணி மகிழ்ந்து துள்ளிட
பெண்மை போற்றும் பேறு காலம்
மண்ணைக் காக்க மலர்ந்தது


#281 கம்பன் எளிய தமிழில்

சித்தரும். இயக்கரும். தெரிவைமார்களும்.
வித்தக முனிவரும். விண்ணுளோர்களும்.
நித்தரும். முறை முறை நெருங்கி ஆர்ப்புற.
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே.

தத்துறல் ஒழிந்து தருமம் ஓங்க
சித்தரும் இயக்கரும்
தத்தம் தேவியரும்
வித்தகரும் வானவரும்
நித்தரும் முறையே குழுமி
சத்தமாய் ஆர்பரித்தனர்


#282 கம்பன் எளிய தமிழில்

ஒரு பகல் உலகு எலாம்
  உதரத்துள் பொதிந்து.
அரு மறைக்கு உணர்வு அரும்
  அவனை. அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில்
  காட்டும் சோதியை.
திரு உறப் பயந்தனள் - திறம்
  கொள் கோசலை.

பிரளயப் பேரழிவில்
உதரம் மறைத்து உலகு காத்து
ஆலிலையில் தவழ்ந்து
திருவுலா சென்ற திருமாலை
அருமறை உணர்ந்தும்
பொருள் தேட இயலா
பரம்பொருளாம் அப்பரமனை
கருவிழி தீட்டிய அஞ்சனமும்
கருமுகில் கொழுந்து எழில் காட்டும்
கருநிற ஒளியாய் திகழ்பவனை
வின்னில் மங்கலம் முழங்கிட

மண்ணில் ஈந்தனள் திறம்கொள் கோசலை

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...