#205 கம்பன் எளிய தமிழில்
பாரிஜாதமும் கற்பகமும்
ஹரிசந்தனமும் சந்தனமும்
மந்தாரமும் நிறைந்த
இந்திர லோகத்து அரசன்
பகைவர்க்கு இடியாய்
கிஷ்கிந்தை அரசனாய்
பலம் பெருக்கும் வாலியும்
அவன் மகன் அங்கதனுமாய்
வந்துங்கே அவதரிப்பேன் என்றுரைக்க
காசியப அதிதியின் புதல்வன்
நவகிரக நாயகன் சூரியனும்
வாலியின் இளையவனாய்
சுக்கிரீவனாய் அவதரிப்பேன் என்றுரைக்க
ஆயிரம் நாக்குடையான்
செந்நிற மேனியான்
தென்திசைக்காவலன் அக்கினியும்
வானரத் தலைவன் நீலனாக
அவரோடு அவதரிப்பேன் என்றுரைத்தான்
#வாஞ்சிவரிகள்#
தருவுடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான். ‘எனது கூறு
மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும்’ என்ன;
இரவி. ‘மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன்’
என்று ஓத
அரியும். ‘மற்று எனது கூறுநீலன்’ என்று அறைந்
திட்டானால்
No comments:
Post a Comment