Wednesday, August 2, 2017

#106 கம்பன் எளிய தமிழில்

#106 கம்பன் எளிய தமிழில்

கரும் சக்கரவாள மலையை
பெரும்புறக்கடல் சூழ்ந்தது போல
வானுயர ஓங்கி நிற்கும் மாமதிலை
காத்திடவே வளைந்துள்ள அகழி….!

யாருமறியா விலைமாதின் மனம் போல
கூறமுடியா ஆழமிந்த அகழி….!
தெளிவில்லா புல்லறிவாளர் கவி போல
தெளிவில்லா ஆழமுள்ளது அகழி….!

அருகில் வந்தால் குறுகிடும்   
பருவ மங்கை இடையினை போல
நெருங்க முடியா காவலோடு
மருங்கி  நிற்கும் அகழி….!
 
ஐம்பொறி கேட்டு நன்னெறி செல்லா  
தீநெறி செல்ல விரைதல் போல  
எதிரியை கண்டால் விரைந்து தாக்கும்
முதலைகள் நிறைந்தது அகழி….!

#வாஞ்சிவரிகள்#

சக்கரவாளம் - உட்புறம் ஒளியும் வெளிப்புறம் இருளுங்கொண்டு பூவுலகத்தைச் சூழ்ந்துள்ளதாகக் கருதப்படும் மலை
புல்லறிவாளர் - அறிவீனர்

அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை
  அலைகடல் சூழ்ந்தன அகழி.
பொன் விலை மகளிர் மனம் எனக் கீழ் போய்.
  புன் கவி எனத் தெளிவு இன்றி.
கன்னியர் அல்குல்- தடம் என யார்க்கும்
  படிவு அருங் காப்பினது ஆகி.
நல் நெறி விலக்கும் பொறி என எறியும்

  கராத்தது;- நவிலலுற்றது நாம்.

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...