#119 கம்பன் எளிய தமிழில்
கடும்புயலாய் வீசும் காற்று
நெடுமலையாய் எழும்பும் அலையாய்
விண்ணெலாம் வெளுத்திடும்
வெண்பாற்கடலின் பேரலை போலும்
.
வெண்ணிலவினை விஞ்சும்
வெண்மை உடைத்த
வெண்சங்கு மாவுடைத்து
சுண்ணாம்புச் சாந்து பூசி
விண்ணைத் தொட்டு ஓங்கிநிற்கும்
வெண்ணிற மாட மாளிகைகள்
#வாஞ்சிவரிகள்#
‘திங்களும் கரிது’ என வெண்மை தீற்றிய
சங்க வெண் சுதையுடைத் தவள மாளிகை-
வெங் கடுங் கால் பொர. மேக்கு நோக்கிய.
பொங்கு இரும் பாற்கடல்- தரங்கம் போலுமே.
No comments:
Post a Comment