Wednesday, August 2, 2017

#115 கம்பன் எளிய தமிழில்

#115 கம்பன் எளிய தமிழில்
.
மாடப்புறாவும் மணிப்புறாவும்
கூடி வாழும் கோபுரத்தில்
தேடியும் தென்படாத பெண்புறாவை
நாடியே வாடிநின்ற ஆண்புறா
கோபுரவாயிலின் சித்திரத்தில் மூழ்கி
ஓவியப்புறாவின் ஒயிலில் ஒழுகி
கூவிய தன்புறாவென தழுவிக்கிடக்க
.
கூவியழைத்தும் காணாது
ஊடல் கொண்ட பேடையும்
மாதவமுனிவரும் தேவரும்
மாதவனை  போற்றி வாழும்
வானவர் நிறைந்த வானுலகில்
காமதேனுவும் கற்பகமும்
பாரிஜாதமும் பவளமல்லியும்
தாமரையும் பூத்துக்குலுங்கும்
கற்பகச் சோலையிலே மறைந்திருக்கும்
.
#வாஞ்சிவரிகள்#
.
தா இல் பொன் - தலத்தின். நல்
 தவத்தினோர்கள் தங்கு தாள்
பூ உயர்த்த கற்பகப் பொதும்பர்
 புக்கு ஒதுங்குமால்-
ஆவி ஒத்த அன்பு சேவல்
 கூவ வந்து அணைந்திடா
ஓவியப் புறாவின் மாடு

 இருக்க ஊடு பேடையே.

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...