#115 கம்பன் எளிய தமிழில்
.
மாடப்புறாவும் மணிப்புறாவும்
கூடி வாழும் கோபுரத்தில்
தேடியும் தென்படாத பெண்புறாவை
நாடியே வாடிநின்ற ஆண்புறா
கோபுரவாயிலின் சித்திரத்தில் மூழ்கி
ஓவியப்புறாவின் ஒயிலில் ஒழுகி
கூவிய தன்புறாவென தழுவிக்கிடக்க
.
கூவியழைத்தும் காணாது
ஊடல் கொண்ட பேடையும்
மாதவமுனிவரும் தேவரும்
மாதவனை போற்றி வாழும்
வானவர் நிறைந்த வானுலகில்
காமதேனுவும் கற்பகமும்
பாரிஜாதமும் பவளமல்லியும்
தாமரையும் பூத்துக்குலுங்கும்
கற்பகச் சோலையிலே மறைந்திருக்கும்
.
#வாஞ்சிவரிகள்#
.
தா இல் பொன் - தலத்தின். நல்
தவத்தினோர்கள் தங்கு தாள்
பூ உயர்த்த கற்பகப் பொதும்பர்
புக்கு ஒதுங்குமால்-
ஆவி ஒத்த அன்பு சேவல்
கூவ வந்து அணைந்திடா
ஓவியப் புறாவின் மாடு
இருக்க ஊடு பேடையே.
No comments:
Post a Comment