#109 கம்பன் எளிய தமிழில்
version 1:
கோட்டை அரணாய் உயர்ந்து
நாட்டை காக்கும் மதிலின் வெளிச்சுற்றில்
வளர்ந்து நிறைந்த பாறைகளை
பிளந்து தோண்டிய பேரகழி..!
நாவாய் நீந்தும் நடுக்கடலில்
மூழ்கித் தவித்த மதங்கொண்ட யானை
சூழ்ந்த நீரிலிருந்து மீள முடியாமல்
அமிழ்ந்து எழுந்து அலைந்தது போல்
அகழியில் மிதக்கும் முதலைகள்
கரையை நெருங்கும் பகைவரை
விரைந்து பாய்ந்து தாக்கிடும்
version 2:
கல்வியில் சிறந்த வல்லுனர்கள்
வல்லுனர் கட்டிய கூடங்கள்
கூடங்கள் நிறைந்த நகரம்
நகரைச் சுற்றி மதில்கள்
மதிலைச் சுற்றி கருங்கல் கோட்டை
கோட்டையைச் சுற்றி கடினப் பாறைகள்
பாறையை உடைத்து தோண்டிய அகழி
அகழியின் ஆழம் அதள பாதாளம்
பாதாளம் முழுக்க சீறும் முதலைகள்
நாவாய் நீந்தும் நடுக்கடலில்
மூழ்கித் தவித்தே நீரினன்று
மீள இயலா மதங்கொண்ட யானைகள்
அலையினில் அமிழ்ந்து எழுவது போல்
அகழியில் மிதக்கும் முதலைகள்
கரையை நெருங்கும் பகைவரை
விரைந்து பாய்ந்து தாக்கிடும்
சிறப்பு கொண்டது அயோத்தி...!!!
version 3:final
கல்வியில் சிறந்த வல்லுனர்கள்
வல்லுனர் கட்டிய கூடங்கள்
கூடங்கள் நிறைந்த நகரம்
நகரைச் சுற்றி மதில்கள்
மதிலைச் சுற்றி கருங்கல் கோட்டை
கோட்டையைச் சுற்றி கடினப் பாறைகள்
பாறையை உடைத்து தோண்டிய அகழி
அகழியின் ஆழம் அதள பாதாளம்
பாதாளம் முழுக்க சீறும் முதலைகள்
கப்பல்கள் மிதக்கும் பெருங்கடல்
கடலில் தோன்றிய பேரலைகள்
அலையில் சிக்கிய மதயானைக் கூட்டம்
கூட்டமாய் அமிழ்ந்து எழுவது போல்
ஆழம் மிகுந்த அகழிகள்
அகழியில் மிதக்கும் முதலைக் கூட்டம்
கூட்டமாய் நெருங்கும் பகைவர்கள்
பகைவரை பாய்ந்து தாக்கும் முதலைகள்
சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை சுற்றும்
முற்று பார் எலாம்
போழ்ந்த மா கிடங்கிடைக் கிடந்து
பொங்கு இடங்கர் மா.-
தாழ்ந்த வங்க வாரியில். தடுப்ப
ஒணா மதத்தினால்.
ஆழ்ந்த யானை மீள்கிலாது
அழுந்துகின்ற போலுமே.
No comments:
Post a Comment