#112 கம்பன் எளிய தமிழில்
உருக்கிய வெள்ளியை ஓரத்தில் பூசிவைத்து
திருத்திய பளிங்கு கற்களைப் பதித்த
அழகிய அகழியில் தெளிந்த நீரில்
பழகிய கண்களும் பிரித்தறிய இயலா
நீரெது தளமெது என வானுறை
தேவரும் கண்டறிய லாகாது காண்....
வெள்ளி பூசிய வெளிச்சுற்றும்
வெள்ளைக்கல் பளிங்குத் தலமும்
ஒருங்கே அமைந்து எழில் சேர்க்கும்
அழகிய அகழியின் தெளிந்த நீரில்
பழகிய கண்களும் பிரித்தறியா
வானுறை தேவரும் கண்டறியார்
நீரெது தளமெது என்று
மூலப்பாடல்
விளிம்பு சுற்றும் முற்றுவித்து வெள்ளி
கட்டி. உள்ளுறப்
பளிங்கு பொன்-தலத்து அகட்டு
அடுத்துறப் படுத்தலின்.
‘தளிந்த கல்-தலத்தொடு. அச்
சலத்தினை. தனித்துறத்
தெளிந்து உணர்த்துகிற்றும்’ என்றல்
தேவராலும் ஆவதே?
No comments:
Post a Comment