#98 கம்பன் எளிய தமிழில்
நலன் தம்மை காக்க
புலன் ஐந்தை அடக்கி
துணையாய் அருளும் அறமும் வர
இணையாய்த் தவமும் ஞானமும் ஓங்க
வாழ்வாங்கு வாழும் மேலோர்
வாழ்ந்த புகலிடம் இவ்வயோத்தி..!
விண் மலை கடல்
மண் அர்ச்சை வடிவன்
அரியின் திருவருள் பெற்று
தரித்த பெருமகன் இராமன்
திருமகளின் உருக்கொண்ட
கலைமகளாம் சீதையோடு
அளவிலா ஆண்டுகாலம்
வளமாக வாழ்ந்து வந்த
தலமன்றோ இவ்வயோத்தி..!
ஞானியர் போற்றும் பூவுலகிலும்
வானவர் போற்றும் வானுலகிலும்
இந்நகர் ஒத்த பொன்நகர்
எவரேனும் கண்டதுண்டோ?
#வாஞ்சிவரிகள்#
பரம் வியூகம் விபவம்
அந்தர்யாமித்துவம் அர்ச்சை
- திருமாலின் ஐந்து வடிவங்கள்
மூலப்பாடல்:
தங்கு பேர் அருளும் தருமமும். துணையாத்
தம் பகைப் புலன்கள் ஐந்து அவிக்கும்
பொங்கு மா தவமும். ஞானமும். புணர்ந்தோர்
யாவர்க்கும் புகலிடம் ஆன
செங் கண் மால் பிறந்து. ஆண்டு அளப்ப அருங்காலம்
திருவின் வீற்றிருந்தனன் என்றால்.
அம் கண் மா ஞாலத்து இந் நகர் ஒக்கும்
பொன் நகர் அமரர் நாட்டு யாதோ?
No comments:
Post a Comment